×

சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் 2 பேரை பேலீசார் கைது செய்துள்ளனர். வண்ணாரப்பேட்டையில் கடந்த நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வழக்கு திருப்பத்தை ஏற்படுத்தியது. வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுமி பாலியல் குறித்து வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர், மருத்துவ பேராசிரியர், தொழிலதிபர்கள், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்,  நிருபர், புரோக்கர்கள் என 30க்கும் மேற்பட்டோரை இதுவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனை சென்னை மாநகர கமிஷ்னர் பாராட்டினார். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த கார்த்திக் (35), திரிபுராவை சேர்ந்த தெபாசிஸ்நாமா (19) என இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் சிறுமி பாலியல் வழக்கில் சுடுபிடித்துள்ளது….

The post சிறுமி பலாத்கார வழக்கில் மேலும் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vannarappat ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...